×

தனுஷ் இயக்கும் 3வது பட டைட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ‘பவர் பாண்டி’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். இந்த படம் 2017ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு படம் இயக்காமல், நடிப்பதில் பிசியாக இருந்தார். 6 வருடங்களுக்கு பிறகு தற்போது அவரது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தனுஷ்50’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில் தான் இயக்கும் 3வது படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். ‘வழக்கமான காதல் கதை’ என்ற டேக் லைனும் கொடுத்துள்ளார். இந்த படத்தை தனுசின் வொண்டர்ஃபார் பிலிம்ஸ் சார்பில் கஸ்தூரி ராஜாவும், விஜயலட்சுமி கஸ்தூரி ராஜாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்பட பலர் நடிக்கின்றனர். ரொமாண்டிக் காதல் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

The post தனுஷ் இயக்கும் 3வது பட டைட்டில் அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dhanush ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த...